×

இலங்கையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 18 மீனவர்கள் சென்னை வந்தனர்

சென்னை ; இலங்கை கடற்படை யால் கைது செய்து விடுவிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் நேற்று சென்னை திரும்பினர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் கடந்த மாதம் 7ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களை உடனே விடுவிக்க கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமருக்கு அவசர கடிதங்கள் எழுதினார்.
இதனையடுத்து இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களை விடுதலை செய்தது.

இதையடுத்து 18 மீனவர்களுக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கிநேற்று முன்தினம் இரவு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 18 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை, தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

The post இலங்கையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 18 மீனவர்கள் சென்னை வந்தனர் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Chennai ,Tamil Nadu ,Sri Lankan Navy ,Rameswaram ,Sri Lanka Navy ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...